பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வீட்டில் திருட்டு.. லட்சக்கணக்கில் கொள்ளை.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் வீட்டில் லட்சிய கணக்கிலான வெளிநாட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் டெஸ்ட் ஒரு நாள் மற்றும் டி20 என அனைத்து வகையான போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் தனது மனைவியுடன் முகமது ஹபீஸ் வெளியே சென்றிருந்தபோது, நள்ளிரவில் அவரது வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை கும்பல் ஒன்று புகுந்துள்ளது. இதில் வீட்டில் இருந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை திருடி சென்றுள்ளனர். 

இதனையடுத்து உடனடியாக முகமது ஹபீஸ் மாமனார் சாஹித் இக்பால் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையடித்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan ex cricket captain Mohammad Hafeez home robbery


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->