மெஸ்ஸியா.. நெய்மரா.. போட்டி போடும் கேரளா ரசிகர்கள்.. களைக்கட்டும் கால்பந்து உலகக் கோப்பை.! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது வரும் நவம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர். 2022 பிஃபா உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெறுகிறது.

அர்ஜென்டினாவின் கால்பந்து அணியின் முக்கிய வீரர்களுக்கு கேரளா ரசிகர்கள் பலரும் ஆதரவாக இருப்பார்கள். அர்ஜென்டினா ஜெர்சி அணிந்து அவர்களை போலவே விளையாடி மகிழுந்து தங்களது அன்பை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். 

அந்த வகையில் கோழிக்கோடு மாவட்டம் சிறுபுழா பகுதியில் வசிக்கும் கால்பந்து ரசிகர்கள் லியோனல் மெஸ்ஸிக்கு 30 அடி உயரத்தில் ராட்சத கட் அவுட் வைத்தனர்.

சிறுபுழா ஆற்றிற்கு நடுவில் வைத்த மெஸ்ஸியின் கட் அவுட் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அதற்கு போட்டியாக பிரேசில் ரசிகர்கள் நெய்மருக்கு 40 அடி உயரத்தில் கட் அவுட் வைத்துள்ளனர். 

கால்பந்து உலகக்கோப்பை தொடங்க இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், இப்போதே கால்பந்து ரசிகர்களுடைய உலகக்கோப்பை ஆர்வம் களைகட்ட துவங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Messi and Neymar banners Kerala viral video


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->