#Breaking: கிரிக்கெட் உலகின் சகாப்தம், அதிகாரபூர்வ ஓய்வு அறிவிப்பு.. சோகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெறுவதாக அதிகாரபூர்வகமாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இன்று 7.29 மணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார். 

இந்த விசயம் தொடர்பாக தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக இருந்த, ரசிகர்களால் அன்போடு தல தோனி என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் சில விஷயங்களை பகிர்ந்து சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். 

தல தோனியின் வாழ்க்கை தொடர்பான தகவல்கள் எம்.எஸ்.தோனி திரைப்படத்தின் மூலமாக எடுக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. எம்.எஸ் தோனி கடந்த 7 ஜூலை 1981 ஆம் வருடத்தில் பிறந்தார். 

இவர் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக பல பிரச்சனைகள், இழப்புகள், வேதனைகள் என பலவற்றை சந்தித்து, கிரிக்கெட் உலகில் யாராலும் ஈடு செய்ய இயலாத உச்சத்தை தொட்டவர். இந்தியாவையே பெருமைப்படுத்தி, உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தவர்.

கடந்த சில வருடமாகவே தோனி கிரிக்கெட் உலகில் இருந்து விடைபெறுகிறார் என்று பல தகவல் பகிரப்பட்டு வந்த நிலையில், இப்போது அவரே அதனை உறுதி செய்துள்ளார். மேலும், ஐ.பி.எல் போட்டி பயிற்சிக்காக தல தோனி சென்னையில் முகாமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahendra Singh Dhoni Announced world cup Retirement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->