உலகக்கோப்பைக்கான இந்திய அணி உறுதியானது! 22 ஆம் தேதி இந்திய அணியுடன் இணைகிறார்?!  - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. அணியின் கேப்டனாக விராட் கோலி, துணை கேப்டனாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், டோனி, குல்தீப், சாஹல், ஜஸ்பிரிட் பும்ராஹ், புவனேஸ்வர் குமார், முகமது சமி, ஹர்திக் பாண்டியா, விஜய்சங்கர், ரவிந்திர ஜடேஜா ஆகிய 15 பேரும் இடம் பெற்றுள்ளனர். 

இந்த 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றிருந்த கேதர் ஜாதவ் நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடினார். 12  போட்டியில் விளையாடிய கேதர் ஜாதவ் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் தொடர்ந்து ஆட்டத்தில் இடம்பெற்று கொண்டிருந்தார். 12வது போட்டியின்போது பில்டிங் செய்கையில் அவர் காயமடைந்த நிலையில் தொடரில் இருந்து பாதியிலே அவர் விலக நேரிட்டது. 

இந்நிலையில் வருகிற 23-ஆம் தேதி உலக கோப்பை அணியை அறிவிக்க இறுதி நாளாகும். 23 ஆம்  தேதிக்குப் பிறகு ஐசிசியின் அனுமதி பெற்றே அணியில் மாற்றத்தினை செய்ய முடியும். அதே போல இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் கலந்து கொள்ள மே 22ஆம் தேதி இங்கிலாந்து நாட்டிற்கு பயணமாகிறது. பயணம் மேற்கொள்ள உள்ள 22 ம் தேதி வரை கேதர் ஜாதவ் உடல் தகுதி கவனிக்கப்படும் எனவும், அவர் உடல் தகுதி பெற்று விட்டால் அவர் இங்கிலாந்திற்கு செல்வார் எனவும் அறிவிக்கப்பட்டது. 

அண்மையில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஏ பிரிவு போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டது. அப்பொழுது  கேதர் ஜாதவ் காயம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது அவர் உடல் தகுதி பெறவில்லை எனில் அதற்கு பதிலாக அம்பத்தி ராயுடு அல்லது அக்சர் பட்டேல் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இவர்கள் மட்டுமில்லாது அந்த இடத்திற்கு மேலும் மூன்று வீரர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் அசத்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, நவ்தீப் ஷைனி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. 

எதுவாக இருந்தாலும் மே 22ஆம் தேதி இந்திய அணி பயணம் ஆகும் போதுதான் உறுதியாகும் என அறிவிக்கப்பட்டது. ஜாதவ் தன்னுடைய உடற்தகுதியை மேம்படுத்துவதற்காக தொடர் சிகிச்சையில் இந்திய அணிக்கான உடற்தகுதி நிபுணருடன் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். தினம் தினம் பரிசோதனைகளை செய்து கொண்டு வந்தார்.  கேதர் ஜாதவ் பேட்ஸ்மேன் மட்டுமல்லாது பகுதிநேர பந்துவீச்சாளராக, விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்படும் அவர் அணியில் இடம் பெறாமல் போனால் அது நிச்சயமாக இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் என கருதப்பட்டது. இந்நிலையில் இன்று கெதர் ஜாதவ் தன்னுடைய உடல்தகுதியை நிரூபித்துள்ளார் எனவும், அவர் 22 ஆம் தேதி இந்திய அணியினருடன் இங்கிலாந்து புறப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Video : தப்பு கணக்கு போட்ட ஸ்டாலினால் திமுக தொண்டர்கள் குழப்பம்!  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kedhar jathav fit for worldcup 2019


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->