இர்பான் பதான் தேர்வு செய்த சிறந்த ஐபிஎல் வீரர்கள்.. அதிர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15வது சீசனின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி பங்கேற்ற முதல் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அறிமுகமான முதல் தொடரிலே குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்று கொடுத்ததன் மூலம் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ஐபிஎல் கோப்பையை வென்ற 4-வது இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ஹார்திக் பாண்டியா. 

ஐபிஎல் 15வது சீசனின் முடிவடைந்ததை அடுத்து, கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஐபிஎல் 2022-ல் சிறப்பாக விளையாடி வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டார். 

இந்நிலையில், ஐபிஎல் 2022-ல் சிறப்பாக விளையாடிய 12 வீரர்கள் பட்டியலை இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஒருவர் கூட இடம்பெறவில்லை.

இர்பான் பதானின் வீரர்களின் பட்டியல் :  ஜோஸ் பட்லர், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் 9விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மில்லர், ரஷித் கான், ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக் மற்றும் குல்தீப் யாதவ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Irfan Pathan IPL team for this 2022 season


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->