ஐபிஎல் மினி ஏலம்.. அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது.

இந்த மினி ஏலத்தில் மொத்தம் 405 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். இதில், ரூ.167 கோடி செலவிடப்பட்டு 80 வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்;

இதில், ஐபிஎல் வரலாற்றிலேயே  அதிகபட்ச விலைக்கு இங்கிலாந்து வீரர் சாம் கரண் ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. அதேபோல் ஹாரி ப்ரோக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.

மேலும், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான பெண் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை 17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரானை ரூ.16 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணி வாங்கியுள்ளது.

இந்திய வீரர் மயாங்க் அகர்வாலை ரூ8.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.

இளம் வேகுபந்து வீச்சாளர் ஷிவம் மாவியை ரூ.6 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஜாசன் ஹோல்டரை ரூ.5.75 கோடிக்கு ராஜஸ்தான் ராயல் அணி வாங்கியுள்ளது.

இந்திய வீரர் (முதல் தர கிரிக்கெட் வீரர்) முகேஷ் குமாரை ரூ.5.5 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்ரிக் க்ளாசனை ரூ.5.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வாங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL mini auction 2023 highest paid players


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->