15-வது ஐபிஎல் சீசனில் விளையாடவுள்ள 14 தமிழக வீரர்கள்.. எந்தெந்த அணிகளுக்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


15வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் புதிதாக இணைந்துள்ளது. 

10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 25 வீரர்களை வைத்துக்கொள்ளலாம். அதன்படி, பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களை தேர்வு செய்ய ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற்றது.

இந்த ஐபிஎல் மெகா களத்தில் பங்கு பெறுவதற்கு மொத்தம் 1,214 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இந்த 590 வீரர்களில் 228 வீரர்கள் சர்வதேச வீரர்கள் என்றும், 355 வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் மட்டும் பங்கேற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 30 வீரர்கள் பங்கு பெற விருப்பம் தெரிவித்த இந்த நிலையில், 14 தமிழக வீரர்கள் ஐபிஎல் 15வது சீசனுக்காக 10 அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள 14 தமிழக வீரர்கள்:

1. ஷாருக்கான் (பஞ்சாப் கிங்ஸ்) – ரூ. 9 கோடி

2. வாஷிங்டன் சுந்தர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) – ரூ. 8.75 கோடி

3. வருண் சக்ரவர்த்தி (கொல்கத்தா நைட்ரைடர்ஸ்) – ரூ. 8 கோடி (ஏற்கெனவே தக்கவைக்கப்பட்டார்)

4. தினேஷ் கார்த்திக் ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) – ரூ. 5.50 கோடி

5. ரவிச்சந்திரன் அஸ்வின் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ரூ. 5 கோடி

6. டி. நடராஜன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) – ரூ. 4 கோடி

7. சாய் கிஷோர் (குஜராத் டைட்டன்ஸ்) - ரூ. 3 கோடி

8. முருகன் அஸ்வின் (மும்பை இந்தியன்ஸ்) – ரூ. 1.60 கோடி

9. விஜய் சங்கர் (குஜராத் டைட்டன்ஸ்) – ரூ. 1.40 கோடி

10. சஞ்சய் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) – ரூ. 50 லட்சம்

11. சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்) – ரூ. 20 லட்சம்

12. பாபா இந்திரஜித் (கொல்கத்தா நைட்ரைடைர்ஸ்) – ரூ. 20 லட்சம்

13. ஹரி நிஷாந்த் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ரூ. 20 லட்சம்

14. என்.ஜெகதீசன் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ரூ. 20 லட்சம்

இதில் 12 பேர் ஏற்கெனவே ஐபிஎல்-லில் விளையாடியவர்கள். பாபா இந்திரஜித்தும், சாய் கிஷோரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக விளையாடவுள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ipl Mega Auction sold to tamilnadu players and team


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->