#IPL2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போது யார்.? குஜராத் - சென்னை பலப்பரீட்சை.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் குவாலியர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

குஜராத் அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமாக அணியாக உள்ளது. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலமாக உள்ளது.

அந்த வகையில் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நேருக்கு நேர்

இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3 போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்த்துள்ளனர்.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 61 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 43 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி சதவீதம் 70 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 qualifier 1 GT vs CSK


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->