ரிஷப் பண்ட் விரைவில் நலம் பெற வேண்டும் - வீடியோ வெளியிட்டு வாழ்த்திய இந்திய அணியினர்.! - Seithipunal
Seithipunal


பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட சென்ற போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே தகவல் கொடுத்திருந்தது. இந்த நிலையில், உத்தரகாண்ட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டுள்ளது.

மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷப் பந்த் தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ரிஷப் பந்த் விரைவில் குணமடைந்து நலம் பெற வேண்டும் எனவும், மீண்டும் கிரிக்கெட் விளையாட வர வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் வீரர்கள் ஹார்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், யுஸ்வேந்திர சஹால், சுப்மன் கில் வாழ்த்திய வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian team wishes to rishabh pant recovery


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->