உலகக்கோப்பைக்கான இந்திய அணி! ரசிகர்களின் ஆவலை தூண்டும் கிரிக்கெட் வாரியம்!  - Seithipunal
Seithipunal


நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும்  50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆனது அடுத்த மாதம் 30-ந்தேதி இங்கிலாந்து நாட்டில் தொடங்குகிறது. இந்த போட்டி தொடரில் தரவரிசையில் முதல் 10 இடங்களை வகிக்கும் இந்தியா உள்பட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என்ற அடிப்படையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி தொடருக்காக இந்திய அணி கடந்த சில தொடர்களை பரிசோதனை முயற்சியில் வீரர்களை களமிறங்கியது. வீரர்களை மாற்றி பரிசோதனை நடத்தியது. ஏறக்குறைய அணிக்கான வீரர்களை தேர்வு செய்துவிட்டோம். அதிகபட்சம் ஒன்றிரண்டு மாற்றங்கள் மட்டுமே இருக்கலாம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த போட்டி தொடர் ஆரம்பிக்க இன்னும் 50 நாட்கள் இருக்கும் நிலையில் ஏப்ரல் 20-ந்தேதிக்குள் இந்திய அணியில் இடம்பிடிக்கும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

"உலகக்கோப்பைக்கான அணியை வருகிற 20-ந்தேதிக்குள் அறிவிக்க இருக்கிறோம். நாங்கள் சிறந்த அணியை அறிவிப்போம் என்பதில் உறுதியாக உள்ளோம், மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதற்காக பல பரிசோதனைகளை செய்துள்ளோம். அனைத்து வீரர்களை பற்றி  தெரிந்து வைத்துள்ளோம்.  நாங்கள் அறிவிக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி கோப்பையை நிச்சயமாக வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது" என தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team squad for world cup 2019


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->