இந்தியாவிற்கு அபார தொடக்கம்! சிக்ஸர்களை பறக்கவிட்ட ரோஹித் அரைசதம்!  - Seithipunal
Seithipunal


இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி போட்டி மும்பை வான்கடே நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றது. தொடரை நிர்ணயிக்கும் 3-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதன்படி இந்திய அணி மீண்டும் முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் இருவரும் அசத்தலான தொடக்கத்தினை கொடுத்துள்ளனர். 

8 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை கடந்து அசத்தியுள்ளது. அதிரடியாக ஆடிய ரோஹித் 23 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். அவர் இதுவரை 4 சிக்சர்கள் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். அதேபோல லோகேஷ் ராகுலும் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளை அடித்து அசத்தியுள்ளார். 29 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். 

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 51 ரன்களுடனும் ரோகித் சர்மா  63 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்த போட்டியில் முதல் சிக்ஸரை அடித்தபோது சர்வதேச போட்டிகளில் 400 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india got speed start in mumbai match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->