இலங்கை பந்து வீச்சில் சுருண்ட இந்திய அணி..சதத்தை தவறவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்.! - Seithipunal
Seithipunal


இலங்கைக்கு எதிரான இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று 2 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியை பகலிரவு போட்டியாகும். இந்த போட்டியை காண 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் ரசிகர்களின் ஆரவாரம் வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும்.

இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். மேலும், இந்திய அணியில் அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் விளையாடிய ஜெயந்த் யாதவ் இந்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த  இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் - 92, பண்ட் - 39, விஹாரி - 31, கோலி - 23 ரன்கள் எடுத்தனர். இலங்கை பந்து வீச்சில் எம்புல்டனியா 3 விக்கெட்டுகளும், ஜெயவிக்ரமா 3 விக்கெட்களும், தனஞ்சய டி சில்வா 2 விக்கெட், லக்மல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India 1st innings 252 for all out


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->