#Breaking : இந்திய - இலங்கை ஒருநாள் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தம்.!  - Seithipunal
Seithipunal


இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இளம் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. 

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய முன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் ஐந்து புதிய இளம் வீரர்களை களமிறங்கியுள்ள இந்திய அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிரிதிவ் ஷா, ஷிகர் தவான் ஜோடி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய ஷிகர் தவான், 13 ரன்கள் எடுத்த போது சமீரா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

இதனையடுத்து, இன்று சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ள அதிரடி மன்னன் சஞ்சு சாம்சன், 46 பந்துகளில் 46 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும்.

அதே சமயத்தில் அதிரடியாக ஆடி வந்த பிரித்விஷா 49 ரன்கள் எடுத்த போது சனகா வீசிய பந்தில் எல்பிடபல்யூ கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவர் அடித்த 49 ரன்னில் 8 பவுண்டரிகளை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமா நிறுத்தப்பட்டுள்ளது, தற்போது வரை இந்திய அணி 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் சூரியகுமார் 22 ரன்களுடனும், மனிஷ் பாண்டே 10  ரன்களுடனும் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs sl last one day rain stopped


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->