இந்தியா-பாகிஸ்தான் போட்டியை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த போட்டியை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ண மைதானத்தில் 7 ஆவது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. 

6அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் இந்தியா, மலேசியா ஆகிய அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியா 4ஆட்டங்களில் விளையாடி 3ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்தியா ஒரு டிராவுடன் 10 புள்ளிகள் உடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அரை இறுதிச்சுற்றுக்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் களம் இறங்குகிறது பாகிஸ்தான் அணி.

இந்த சூழலில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

இந்திய அணி உலக தரவரிசையில் 4 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் அணி 11 வது இடத்திலும் உள்ளது. இருப்பினும், இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs PAK match starts the Chief Minister Stalin


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->