உலக கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பையின் 17-வது லீக் போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர் கொண்டதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரும் துணை கேப்டனுமான ஹர்திக் பாண்டியாவுக்கு பந்து வீச்சின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். அதன் பிறகு அவர் மீண்டும் போட்டியில் பங்கு பெறவில்லை.

மேலும் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு ஹர்திக் பாண்டியா சிகிச்சை பெற்று வருவதால் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் அணியாக இந்தியா அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகி இருப்பது இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று இருந்தாலும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என்பது இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும் 6வது இடத்திற்கு ஒரு ஆல் ரவுண்டராக ஹார்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

உலக கோப்பைத் தொடரில் ஹர்திக் பாண்டியா விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசிப் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சாமி, பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வரும் நிலையில் 4வது வேகப்பந்து வீச்சாளராக பிரசித் கிருஷ்ணா சேர்ந்திருப்பது இந்திய அணிக்கு மேலும் வலு சேர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hardik Pandya withdraws from World Cup 2023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->