ஐபிஎல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வெளியானது அறிவிப்பு!
Govt of India gives official permission to host IPL2020 in UAE
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இந்தியாவில் இந்த வருடம் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதற்கு இந்திய விளையாட்டு துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு இருந்தது. அதற்கான அனுமதி கடந்த ஜூலை 24 ஆம் தேதி கிடைத்தது.
இதன்படி செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கப்படும் போட்டிகளானது நவம்பர் 10ம் தேதி முடிவடைகிறது. மேலும் இந்த போட்டி தொடரில் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் 10 நாட்கள் நடத்தப்படுகிறது. மேலும் இரவு நேர போட்டிகள் அனைத்தும் இரவு ஏழரை மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாடும் அணிகள் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த போட்டி தொடருக்கான அனுமதியை இந்திய அரசு இன்று அளித்துள்ளது. இதன்மூலம் ஐபிஎல் போட்டி நடைபெறுவதற்கான அனைத்து தடைகளும் நீக்கியுள்ளது. இதனை ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிசெய்துள்ளார்.
English Summary
Govt of India gives official permission to host IPL2020 in UAE