முதல் ஒருநாள் போட்டி : திட்டமிட்டபடி போட்டி தொடங்காது! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
First odi start delayed half on hour due to wet at Lucknow
இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரினை விளையாடி முடித்துள்ளது. இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது.
இன்று லக்னோவில் முதலாவது ஒரு நாள் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போட்டியானது மதியம் 1:30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மைதானத்தில் பெய்த மழையின் காரணமாக களத்தை ஆய்வு செய்த நடுவர்கள், ஆட்டம் அரை மணி நேரம் தாமதமாக தொடங்கும் என அறிவித்திருக்கிறார்கள்.
படம் : நேற்று முன்தினம் பெய்த கனமழை
அதன்படி மணி 1:30 க்கு டாஸ் போடப்பட்டு இரண்டு மணிக்கு ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அதற்குள் மைதானம் சரியாகிவிடுமா? போட்டி நடக்குமா? என ரசிகர்கள் கவலையுடன் இருக்கின்றனர்.
20 ஓவர் போட்டி உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக, இந்தியாவின் முன்னணி வீரர்கள் அடங்கிய முதன்மை அணியானது ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்ட நிலையில், ஷிக்கர் தவான் தலைமையிலான அடுத்தகட்ட இந்திய அணியானது தென்னாபிரிக்கா அணியை சந்திக்க இருக்கிறது.
English Summary
First odi start delayed half on hour due to wet at Lucknow