திடீர் திருப்பம்: இங்கிலாந்து அணியுடனான இரண்டு தொடர்கள் ஒத்திவைப்பு.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும், வங்கதேச கிரிக்கெட் அணிக்கும் இடையே நடைபெற இருந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்திவைத்து இருநாட்டு கிரிக்கெட் வாரியமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கும், வங்கதேச அணிக்கும் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற இருந்தது.

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் திருப்பமாக இங்கிலாந்து -வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து -வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு தொடர்களும் ஒத்திவைக்கும் முடிவை, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும், வங்கதேச கிரிக்கெட் வாரியமும் இணைந்து முடிவெடுத்துள்ளனர். இதற்கான எந்த காரணங்களும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. 

இருந்தபோதிலும் வெளியான தகவல்களின் படி நோய்த்தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அதேசமயத்தில், இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது பாதி, வருகிற செப்டம்பர் மாதம் 19 தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது.

இதன் இறுதி ஆட்டம் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்கள் பங்கேற்க உள்ளதால், இந்த வங்கதேச அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eng vs ban match postponed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->