சென்னை அணியில் தோனியின் எதிர்காலம் என்ன?! காசி விஸ்வநாதன் பரபரப்பு பேட்டி!
dhoni's future in CSK team said Kasi Viswanathan
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் 40 வயதை நிறைவு செய்துவிட்டார். இந்த வருடத்துடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடைபெறுமவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவர் மேலும் இரண்டு ஆண்டுகள் அணியில் தொடர்வார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலாளர் காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமானது முதல் சென்னை அணியில் இடம்பெற்று வரும் மகேந்திர சிங் தோனி, இடையில் தடை செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகள் மட்டும் புனே அணிக்காக விளையாடினார். மற்ற சீசன்கள் அனைத்திலும் சென்னை அணிக்காக விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து போட்டித் தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
மூன்று முறை கோப்பையை பெற்றுக் கொடுத்து உள்ள தோனி தலைமையிலான அணியானது, கடந்த 2020 ஆம் ஆண்டு சொதப்பலாக விளையாடி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. மேலும் அந்தப் போட்டித் தொடரில் டோனியின் டேட்டிங் கடுமையான கேள்விக்கு உள்ளானது. இந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற போட்டிகளின் போது இறுதிப்போட்டியில், இது உங்கள் கடைசி போட்டியா? என்று கேட்டதற்கு நிச்சயமாக இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வருட சீசனில் சிறப்பாக விளையாடிய நிலையில் போட்டித் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால், எஞ்சிய போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி தொடருக்கான எஞ்சிய போட்டிகளுக்கும் சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருப்பார் என சென்னை அணியின் மேலாளர் காசிவிசுவநாதன் தெரிவித்துள்ளார்.
40 வயதை நிறைவு செய்து விட்ட தோனி இந்த போட்டி தொடருடன் ஓய்வு பெறுவாரா என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் ஏன் ஓய்வுபெற வேண்டும் அவர் இன்னும் நன்றாக பயிற்சி செய்கிறார், நன்றாக ஓடுகிறார் உடற்தகுதியுடன் இருக்கிறார் அவர் எதற்காக ஓய்வு பெற வேண்டும்? மேலும் 1 அல்லது இரண்டு வருடங்கள் சென்னை அணியில் அவர் இருப்பார் என காசிவிஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பானது தோனியின் ரசிகர்களுக்கும், சென்னை அணியின் ஆதரவாளர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
English Summary
dhoni's future in CSK team said Kasi Viswanathan