சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சஹார் போட்ட ட்வீட்.. குவியும் லைக்.!!
Deepak Chahar Tweet for IPL 2022
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து, சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், தொடக்கம் சரியாக அமையாது மற்றும் பவர் பிளே-வில் அதிக விக்கெட்டுகளை எடுக்கும் தீபக் சாஹர் அணியில் இடம் பெறாதது என கூறப்பட்டது.
இதையடுத்து, பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி, அபாரமாக வெற்றி பெற்றது. இதனிடையே சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சாகர் வெளியேறினார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மூன்றாவது டி20 போட்டியின்போது தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அவர் பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி காயத்திலிருந்து மீண்டு வர பயிற்சியில் இருந்தபோது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தீபக் சாஹர் பங்கேற்க மாட்டார் என தெரிவித்தனர்.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சென்னை அணி வீரர் தீபக் சஹார் வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை; மீண்டும் முழு பலத்துடன் விளையாட களமிறங்குவேன். தொடர்ந்து ஆதரவு அளித்த சென்னை அணி ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
English Summary
Deepak Chahar Tweet for IPL 2022