வெற்றியுடன் ஓய்வு.? CSK கேப்டன் தல தோனி விளக்கம்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டன் தோனி 5வது முறையாக கோப்பையை வென்று கொடுத்த நிலையில் நேற்றுடன் ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில் நேற்று தனது ஓய்வு குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி, என்னுடைய ஓய்வை அறிவிக்க இது சரியான தருணம் என்றாலும் எல்லா இடங்களில் இருந்தும் எனக்கு அளவு கடந்த அன்பு கிடைத்து வருகிறது.

இத்துடன் நான் எளிதாக கிளம்பி விட முடியாது. ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால் 6 மாதங்கள் கடினமாக உழைத்து. மேலும் ஒரு ஆண்டு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது தான். அது என்னிடமிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் அதே நேரத்தில் என்னுடைய உடல் ஒத்துழைக்கமா என்பதையும் பார்க்க வேண்டும்.

அந்த வகையில் தோனி இவ்வாறு பேசியது அடுத்த ஐபிஎல் சீசன் எனும் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CSK captain MS Dhoni speech about retirement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->