ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி... ஐ.பி.எல் தொடர்பாக பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு.!!
BCCI Announce IPL post pended till may 3
இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கமானது மிகவும் அதிகரித்து வந்தது. இதனால் பல உயிரிழப்புகள் மற்றும் பாதிப்பு எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் கரோனா வைரஸின் பரவல் விகிதம் அதிகரித்து வருவதால், 21 நாட்கள் அமலான ஊரடங்கு மேலும் நீட்டிப்பு செய்து, மே மாதம் 3 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது.
கரோனா வைரஸின் தாக்கத்தால் 10383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 283 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு நீட்டிப்பின் காரணமாக பல்வேறு சேவைகளும் நீட்டிப்பு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. மேலும், பள்ளி கல்லூரி தேர்வுகளும் நீட்டிப்பு செய்தும், குறிப்பிட்ட படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் இரத்து செய்து அறிவிக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.பி.எல் விளையாட்டுப்போட்டி நடைபெற தேதிகளும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கரோனா வைரஸின் காரணமாக இவை அனைத்தும் நடைபெறுமா? நடைபெற்றதா? என்ற சந்தேகம் எழுந்தது.
இதனையடுத்து ஊரடங்கு துவக்கத்தில் அமல்படுத்தப்பட்ட 21 நாட்களை மேற்கோள்காட்டி ஐ.பி.எல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஊரடங்கு நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐ.பி.எல் விளையாட்டு போட்டிகளை ஒத்திவைத்து இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
BCCI Announce IPL post pended till may 3