இன்றைய ராசிபலன்கள்.. உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட திசை.. எண்.. என்ன? - Seithipunal
Seithipunal


மேஷம்:

தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் ஏற்படும். வாதத்திறமையால் லாபம் அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் உங்களின் செல்வாக்கு உயரும். தம்பதிகளுக்கிடையே அன்பு மேலோங்கும்.

ரிஷபம்:

வெளிநாடு தொடர்பான விஷயங்கள் சற்று காலதாமதத்திற்கு பின்பே நிறைவேறும். மனதில் இனம்புரியாத பதற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது சிறப்பு. புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வாரிசுகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம்:

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மேம்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நிர்வாகத்திறமை மற்றும் அனைவரையும் அனுசரித்து செல்லும் குணத்தினால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். கௌரவப் பதவிகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.

கடகம்:

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கவனத்துடன் இருக்க வேண்டும். விளையாட்டாகப் பேசும் சில வார்த்தைகள் கூட பிரச்சனைகளாக உருவாகக்கூடும் என்பதால் நிதானம் வேண்டும். கடன் தொடர்பான செயல்பாடுகளால் மனவருத்தங்கள் நேரிடும்.

சிம்மம்:

உடல் சோர்வினால் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். வாக்குவாதங்களின் மூலம் சில கசப்புகள் ஏற்பட்டாலும் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையையும், சாமர்த்தியமும் மேம்படும். நண்பர்களுடன் உரையாடும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்கவும்.

கன்னி:

ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் மூலம் உயர்கல்வி தொடர்பான கவலைகள் குறையும். மனைவியின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மருந்துப்பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் நண்பர்களின் உதவிகளால் லாபம் அடைவீர்கள்.

துலாம்:

விருப்பமானவர்களுக்காக சில உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். உங்களின் மீதான அவப்பெயர்கள் நீங்கி நற்பெயர் உண்டாகும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். சேமிப்புகள் தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும்.

விருச்சகம்:

பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் பொழுது மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரமும், மேன்மையும் உண்டாகும். திட்டமிட்ட சில காரியங்களில் எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

தனுசு:

உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். ஆராய்ச்சி சம்பந்தமான பணியில் எண்ணிய பலன்கள் உண்டாகும். பிள்ளைகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய இலட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை உண்டாகும்.

மகரம்:

நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களை பற்றிய நம்பிக்கை மேலோங்கும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். எந்தவொரு வேலையிலும் முழு கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தினரை அனுசரித்து செல்லவும். விளையாட்டு வீரர்கள் பயிற்சியின்போது கவனத்துடன் ஈடுபடவும்.

கும்பம்:

உறவினர்களிடமிருந்து வரும் சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான எண்ணங்கள் மேம்படும். உடல் தோற்றப்பொலிவு மற்றும் அதற்குண்டான பயிற்சிகளை பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளும், ஆதரவுகளும் கிடைக்கும்.

மீனம்:

மனதில் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சகோதரர்களினால் சுபவிரயங்கள் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். கோப்புகளை கையாளுவதில் கவனம் வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may 06 rasi palan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->