#BREAKING || மதுரை மீட்சி அம்மன் கோவில் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு.!
madurai meenatchi amman temple announce
கொரோனா இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டும் கோவிலுக்குள் அனுமதி என்ற அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
"கொரோனா நோய் 3 -வது அலை தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் (டோஸ்) செலுத்தியவர்கள் மட்டுமே 13.12.2021-ந் தேதி முதல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என திருக்கோயில் மூலம் வெளியிடப்பட்ட அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக திரும்ப பெறப்படுகிறது.
மேலும் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது." என்று அந்த அறிவிப்பில் தெரிவிப்பிக்கப்பட்டுள்ளது.
English Summary
madurai meenatchi amman temple announce