நிதானத்துடன் செயல்பட்டு நினைத்ததை செய்யும் ராசிக்காரர்களுக்கு அதிசார சனிப்பெயர்ச்சி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


அதிசார சனிப்பெயர்ச்சி பலன்கள்:

மகர ராசி:

மகர ராசிக்கு ஜென்ம இடத்தில் இருந்துவந்த சனிபகவான் அதிசார பெயர்ச்சியின் காரணமாக இரண்டாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்தார்.

சனி பார்வை படும் ராசிகள் :

சனி தான் நின்ற ராசியிலிருந்து,

மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான சுக ஸ்தானத்தையும்,

ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான அஷ்டம ஸ்தானத்தையும்,

பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான லாப ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

பலன்கள் :

பேச்சுக்களில் நிதானமும், பொறுமையும் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணம் தொடர்பான விஷயங்களில் வேகத்தைவிட விவேகம் அவசியமாகும். மனதில் புதுவிதமான தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். 

தனம் தொடர்பான நெருக்கடிகள் அனைத்தும் படிப்படியாக குறையும். புதிய வேலை நிமிர்த்தமான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் மேம்படும். 

உடலளவில் இருந்துவந்த சோர்வு நீங்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகளும், புதிய பொருட்சேர்க்கையும் உண்டாகும்.

செயல்பாடுகளில் உங்களின் மீதான சில வதந்திகள் குறையும். விலையுயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய வீடு கட்டுவதற்கான எண்ணங்கள் மேம்படும். தேவைக்கேற்ப தனவரவுகள் இருந்தாலும் அதைப்பற்றி விவரங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. 

குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருக்கவும். பங்குச்சந்தை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

adhisaragurupeyarchi palankal for magara rasi 2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->