இன்றைய தினப்பலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு மேம்படும்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

மனதில் இனம் புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தந்தை வழி உறவினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படுவது நல்லது. செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்:

அருள்தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயமடைவீர்கள். பங்கு வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

மிதுனம்:

எண்ணிய இலக்கை அடைவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். மற்றவரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்:

வியாபார பணிகளில் லாபம் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.  ஆதரவு கிடைக்கும் நாள்.

சிம்மம்:

வீடு மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மனதில்  புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். இசை சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவும், புரிதலும் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

கன்னி:

உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகள் மனதளவில் புதிய நம்பிக்கையை உருவாக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும். போட்டி  நிறைந்த நாள்.

துலாம்:

நண்பர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பொன், பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் தகுந்த ஆலோசனைகளைப் பெற்று முடிவெடுப்பது மேன்மையை ஏற்படுத்தும். விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்:

உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.

தனுசு:

உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும் நாள்.

மகரம்:

பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சிந்தனைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

கும்பம்:

காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கால்நடைகளின் மூலம் லாபம் மேம்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் சாதகமாக அமையும். பொறுமை வேண்டிய நாள்.

மீனம்:

புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான சூழ்நிலைகள் அமையும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 feb rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->