தினப்பலன்கள்... இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான நாள்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் திடீர் மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வகையால் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். ஒத்துழைப்பு மேம்படும் நாள்.

ரிஷபம்:

வாழ்க்கைத்துணைவருடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். தந்தையின் ஆரோக்கியம் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். புதுவிதமான பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படவும்.  எதிர்ப்புகள் நிறைந்த நாள்.

மிதுனம்:

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.  சோதனைகள் நிறைந்த நாள்.

கடகம்:

எதிர்காலம் நிமிர்த்தமான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் கற்பனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களிடம் கவனத்துடன் செயல்பட வேண்டும். இன்பகரமான நாள்.

சிம்மம்:

பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இழுபறியான சில விஷயங்களுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். மனை தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.  தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கன்னி:

பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். திட்டமிட்ட பணிகளில் காலதாமதங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் வேகத்தை விட விவேகத்தை கடைபிடிக்கவும்.  கனிவு நிறைந்த நாள்.

துலாம்:

உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.  பாராட்டுகள் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் அமையும்.  மேன்மை நிறைந்த நாள்.

தனுசு:

வியாபாரம் நிமிர்த்தமான பேச்சுக்களில் கனிவு வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நிம்மதி நிறைந்த நாள்.

மகரம்:

உறவினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கால்நடை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சுகங்கள் நிறைந்த நாள்.

கும்பம்:

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். மறைமுகமாக இருக்கக்கூடிய தடைகளை அறிந்துகொள்வீர்கள். மனை விருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  விழிப்புணர்வு வேண்டிய நாள்.

மீனம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும்.  வெற்றி நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 jan rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->