பிரபல யூடியூபர்ருக்கு சிக்னலில் நின்றவாறு நீதிமன்றம் நூதன தண்டனை.! வைரல் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


ஹைதரபாத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் கோட்லா பினோய், கடந்த செப்டம்பர் மாதத்தில் சென்னை அண்ணா சாலையில் சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டார். 

இதன் காரணமாக தமிழக போலீசார் கோட்லா பினோய் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைதும் செய்தனர். எனவே, முன்ஜாமீன் பெறுவதற்காக பினோய் விண்ணப்பித்திருந்த நிலையில்., நீதி மன்றம் அவருக்கு ஒரு நிபந்தனை வைத்தது. 

அதில், "ஜாமீன் வேண்டுமெனில் கோட்லா பினோய் தேனாம்பேட்டை சிக்னலில் வாகன விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்க வேண்டும்." என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

அதன் படி பைக் சாகசத்தில் ஈடுபட்ட பினாய் தற்போது தேனாம்பேட்டை சிக்னலில் வாகன விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி வருகிறார். இதற்கான வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youtuber binoy in thenampettai signal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->