‘டிக் டாக்' செயலிக்கு தடை... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
tik tok ban in supreme court
‘டிக் டாக்’ செயலியில் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ஏற்ப அசைவுகள் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். மாணவ-மாணவிகள் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். இவற்றை பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தாலும், சிலரின் வீடியோக்கள் ஆபாசமாக உள்ளது.
இவற்றை தணிக்கை செய்வதற்கான சட்டங்கள் எதுவும் இல்லாததால் கட்டுப்பாடு இல்லாமல் இது போன்ற செயலிகள் செயல்பட்டு வருகின்றது.
டிக் டாக் செயலியில் நமது கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோக்கள் வருவதால் அதனை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ‘டிக் டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு கடந்த 3-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
அவசர வழக்காக விசாரிக்க மறுக்கப்பட்டது, இந்த வழக்கு உரிய நேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கூறியது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த உத்தரவை நீக்க மறுத்துவிட்டது.
English Summary
tik tok ban in supreme court