சமுத்திர வாணி.. சமுத்திர ராணி.. நெட்டிசன்களிடம் சிக்கி லொங்கடியாக லோல்படும் சமுத்திரக்கனி.. !! - Seithipunal
Seithipunal


இணையதளங்கள் என்பது இன்றளவில் மிகவும் பரபரப்பாக இருக்கும் இடங்களில் ஒன்றாக மாறிவிட்டது. மனிதர்கள் உணர்ச்சியுடன் சாலைகளில் நடந்து சென்று கொண்டு இருக்கும் நிலையில், இணையம் என்ற பால்வழி அண்டத்தில் கைவிரல்களின் உதவியுடன் பல விஷயங்களை பரிமாறிக்கொண்டு வருகின்றனர். 

தினமும் காலையில் எழும்போதும், இரவு அயரும் போதும் கண்களால் சமூக வலைத்தளங்களை உபயோகம் செய்யாமல் இருந்தால் பலருக்கு தூக்கம் வராத நிலையில், தூக்கம் வருவதற்கும் உபயோகம் செய்து வருகின்றனர். 

இவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயங்களையும், பிடிக்காத விஷயங்களையும் அதிகளவு பரிமாறி, பல உலக போர்களை வழிவகை செய்யும் வகையில் சண்டைகள் செய்வதும், மாறி மாறி பதில் கூறி அடித்துக்கொள்வதிலும் என்று பல கலவரங்கள் உண்டாகும் இடமாகவும், நகைசுவை, உலக அறிதல், மக்களின் நிலைமை என்று பல விஷயத்தை உடனுக்குடன் தெரிவிக்கும் கருவியாகவும் இது அமைகிறது. 

இணையம் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை புரிந்துகொண்ட நிறுவனங்கள் உபயோகிப்பாளர்களை புரிந்து கொண்டு, அவர்களின் வசதிற்கேற்ப பல செயலிகளை உருவாக்கி விளம்பரப்படுத்தி மக்களிடையே அறிமுகம் செய்தது. இந்த இணையதளங்களில் பல சுவாரசிய சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும். 

நடிகர்களின் பெருமை, சம்பவத்தின் வீரியம் என்று அந்தந்த விஷயத்தை பொறுத்து அதிகளவு மக்களால் பல விஷயங்கள் பேசப்பட்டு வரும். இந்த நிலையில், சமூக நெட்டிசன்கள் தற்போது இணையத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனியை வறுத்தெடுத்து வருகின்றனர். 

என்ன விஷயம்? இப்படி எதற்கு சமுத்திரக்கனியை இவர்கள் வறுத்தெடுக்கிறார்கள் என்று இணையதள நெட்டிசன்கள் பதிவு செய்த பதிவுகளின் படி, இயக்குனர் சமுத்திரக்கனி திரைத்துறையில் அறிமுகமாகிய சமயத்தில் நல்ல உச்சநிலையை அடைய சில படங்களை எடுத்து வந்த நிலையில், மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தவுடன் புரட்சி பேச துவங்கியுள்ளார். 

இவர் பேசிய புரட்சிகள் அனைத்தும் அவரே பின்பற்ற இயலாத அளவு இருந்தாலும், எதோ பேச வேண்டும், அடுத்த படம் மக்களிடம் வரவேற்பு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் புரட்சி என்று பொய் பேசி வந்துள்ளார். இவர் பேசிய புரட்சி இவரது சொந்த ஊரிலேயே எடுபடாது என்பது உண்மை.. இவரது சொந்த வீட்டில் நடைபெறும் பிரச்சனை மறைத்து புரட்சி என்று பொய் பேசி, பல அப்பாவிகளின் வாழ்க்கையை பாழாக்கி வரும் இவரை அன்போடு கலாய்த்து வருகிறோம் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவரின் புரட்சிப்படி இவர் சமூகத்தில் நல்ல அந்தஸ்து, திரைத்துறையை வைத்து பணம் சம்பாரித்துவிட்டு பகுத்தறிவு, புரட்சி என்று பேசிய இவர், இவரது வீட்டில் உள்ள பிரச்சனையை பொறுத்து திடீரென தனது நிலையை மாற்றிக்கொண்டால் என்ன செய்வார்? என்ற கோபமான கேள்வியையும் எழுப்பியுள்ளனர். இவரது சொந்த ஊருக்கு செல்லும் போது உறவினரை முறைமாற்றி அழைப்பாரா? என்றும் கேட்டுள்ளனர். #Pray_For_samuthirakani

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samuthirakani trolled by social media handlers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->