ஜாதி பார்த்து சப்போர்ட்.. புரட்சி சிகரங்கள் எங்கே?.. திண்டுக்கல் மற்றும் சிவகாசி சிறுமி பாலியல் பலாத்காரம்... கொலை... நியாபகம் உள்ளதா?..!!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் 6 வயது மகளுடன் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்த நிலையில், இவரது மகள் அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த வாரத்தின் போது பள்ளி விடுமுறை நாளில் சிறுமி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். 

இந்நிலையில், மாலை நேரத்தில் வீடு திரும்பிய பெற்றோர் தனது மகளை காணாது பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். மகளை எங்கும் தேடியும் காணாது திணறிப் போன நிலையில், அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் உடலில் பலத்த காயத்துடன் சிறுமி பிணமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதனையடுத்து இவரது உடல் திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இதே பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. மருத்துவமனை பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

சந்தேகத்திற்கு இடமான இரண்டு வாலிபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இப்பகுதியை சார்ந்த ட்ராக்டர் உரிமையாளர் உமா சேகர் என்பவர் கைது செய்யப்பட்டதற்கு பின்னர் மேற்கொண்ட விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் டிராக்டரில் சிறுமியை வைத்துள்ளனர். இந்த நேரத்தில் வலியால் துடிதுடித்த சிறுமி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், 16 வயதாகும் சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  

இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது வரை குற்றவாளிகளின் புகைப்படம் கூட வெளியாகாத நிலையில், பல அரசியல் முற்போக்கு கட்சிகளும் இதற்க்காக எந்த ஒரு குரலும் கொடுத்ததாக தெரியவில்லை. பாலியல் பலாத்கார குற்றங்கள் மற்றும் கொலைகள், நாடகக்காதல் கொலைகள் போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களை காப்பதற்கு இவர்களை தூண்டிவிடும் குழுஒன்று பின்புலமாக செயல்பட்டு வருகிறது. 

நாங்கள் செய்வது உண்மையான காதல், எங்களின் காதலை கொச்சைப்படுத்தாதீர்கள் என்று முட்டுக்கொடுக்க வரும் நபர்கள், "பெண்" என்ற ஒற்றைச்சொல்லிற்கு ஒன்றுகூடமால், இந்த ஜாதி பெண்.. இவளுக்கு குரல் கொடுக்கக்கூடாது என்று அமைதிகாத்து வருகின்றனர். மேலும், பெண்கள் விடுதலை, அவர்கள் வெளியே வரவேண்டும் என்று போராட்டம் செய்த குழுவினர் ஜாதி பார்த்தான் மேற்கூறிய பிரச்சனைகளுக்கு குரல் எழுப்ப வருகின்றனர். திண்டுக்கல் சிறுமி சஞ்சனாவின் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலையின் துயரமும் இப்படியே அமைத்துள்ளதும், சிவகாசி சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பான வழக்கும் எந்தவிதமான முன்னேற்றமும் கிடைத்ததாக செய்திகள் கூட வெளியாகவில்லை என்பதே பலருக்கு புரியவில்லை என்பதே நிதர்சனம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in dindigul and sivakasi child sexual abuse police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->