இன்டர்நெட்டில் பணம் செலுத்துபவர்களுக்கு நற்செய்தி.! வெளியான முக்கிய அறிவிப்பு.!!
happy news for online payment peoples
இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக எஸ்பிஐ திகழ்கிறது. கடந்த மார்ச் 31ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி எஸ்பிஐ வங்கியில் இண்டர்நெட் பேங்கிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 6 கோடி பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மொபைல் பேங்க் சர்வீஸை 1.41 பயன்படுத்துவதும் தெரியவந்தது.
அத்துடன் எஸ்பிஐ வங்கியின் மார்க்கெட் பங்குகள் 18% மொபைல் பேங்கிங் மூலம் நடைபெறுவதும் கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி எஸ்பிஐ-யின் டிஜிட்டல் செயலியான யோனோ மூலம் ஒரு வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இதனால் வாடிக்கையாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம், உடனடி கட்டண சேவை மற்றும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் ‘நிகழ்நேர மொத்த தொகை செலுத்தல் ஆகியவற்றின் சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய திட்டமிட்டது.
ஆலோசனைப்படியே தற்போது, தேசிய மின்னணு நிதி பரிமாற்றம், உடனடி கட்டனை சேவை மற்றும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் நிகழ்நேர மொத்த தொகை செலுத்தல் ஆகியவற்றின் சேவைக்கட்டணத்தை ரத்து செய்து அறிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
happy news for online payment peoples