உங்களுக்காக நாங்கள் வெளியே.. நாட்டுக்காக நீங்கள் உள்ளே".. வைரலாகும் காவல் துறை அதிகாரியின் ட்விட்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 182 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவரை 308,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,068 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. 

மருத்துவ நிபுணர்களும் இதற்கான மருந்துகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் பரவிய கரோனா வைரஸ் 332 பேருக்கு பரவியுள்ளது. மேலும், 5 பேர் பலியாகியுள்ளனர். மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த இன்று (21/03/2020) ஞாயிற்றுக்கிழமையன்று ஊரடங்கு கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதன்படி பேருந்துகள், இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் காலை சுமார் 7 மணிமுதல், இரவு 9 மணிவரை வீட்டில் மக்கள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கரோனா வைரஸால் உலகளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவு துவங்கியுள்ள நிலையில், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் வெறிசோடி காணப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

corona virus india announce Bandh social media video


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->