நடத்தையில் சந்தேகம்.. மரண ஓலமிட்ட மனைவி... மாறாத கணவன்.. இறுதியில் கொடூரம்.!
suicide and murder in namakkal
நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் மல்லசமுத்திரம் அருகே கோணங்கி பாளையத்தை சேர்ந்த சித்தனென்ற கூலி தொழிலாளி அடிக்கடி குடித்துவிட்டு தன்னுடைய மனைவி ஈஸ்வரி இடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளா.ர் மது குடிக்க பணம் கேட்பதுடன் அவருடைய நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து, உதைத்து தொந்தரவு செய்துள்ளார்.
மேலும், போனில் அடிக்கடி யாரிடம் பேசினாய் என்று கேட்டும் சகட்டுமேனிக்கு அடித்து துன்புறுத்துவது வழக்கம். இதுபோல, நேற்று இரவும் சித்தன் குடித்துவிட்டு மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த சித்தன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஈஸ்வரியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதன் காரணமாக ஈஸ்வரி நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து மரண ஓலம் இட்டுள்ளார். இதன் காரணமாக சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனை பார்த்த சித்தன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தார்.
இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். அதன் பின்னர் சித்தனை தேடி உறவினர்கள் வர அவர் சோளக்காட்டில் விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இருவரது உடலையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஈஸ்வரிக்கு திருமண வயதில் மூன்று மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
suicide and murder in namakkal