குஷ்பூவுக்கும், கஸ்தூரிக்கு டிஷ்யூம்..டிஷ்யூம்.! என்ன சிம்ரன் இதெல்லாம்.?!  - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நடிகை குஷ்பு, சமீபகாலமாக சமூக வலைதளங்களில் இயக்காமல் இருந்தார். இந்நிலையில், இந்திய குடியுரிமை விவகாரம் குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட ஆரம்பித்திருக்கிறார். அதில் நடிகை கஸ்தூரி சென்று பதிலளித்து சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.

இதுகுறித்து நடிகை குஷ்பு," நம் நாட்டில்,  குடிமகன் யார் ? குடிமகன் அல்லாதோர் யார்  என பிரிக்க  நீங்கள் யார்? நம் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அழிக்கும் ஆணைகளை தருவதற்கு  நீங்கள் யார் ? நீங்கள் இப்போது அகதிகள் என்று அழைப்பவர்கள் தான் உங்களை ஆட்சியில் அமர வைக்க வாக்களித்தவர்கள். நாம் நாடு மதச்சார்பின்மையால் இருக்கிறது" என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை கஸ்தூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்," வாக்களிக்கபவர்கள் எப்படி அகதிகளாகவும் , அந்நியர்களகாவும் இருக்க முடியும்? நாட்டில் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களே ஓட்டுப்போட முடியும். மேலும், நீங்கள் சி.ஏ.பி ( இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா ) மற்றும் என்.ஆர்.சி இரண்டையும் பற்றி குழப்பி கொள்கிறீர்கள்." என்று தெரிவித்து இருந்தார்.

இதனை பார்த்த குஷ்பு ஆத்திரமடைந்து, "நான் சி ஏ பி மற்றும் என் ஆர் சி குறித்து கருத்து கூறினேனா? நீங்கள் ஓய்வெடுக்கலாம்.": என்று தெரிவித்து இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

witter war between kasthuri and kushpoo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->