நீலகிரியில் ஆ.ராசாவை டெபாசிட் வாங்க விட மாட்டோம் - சவால்விட்ட நிர்வாகி! - Seithipunal
Seithipunal


இந்து மதத்தையும் தனி மனிதனையும் இழிவுபடுத்திய ஆ.ராசா ! எம்பி பதவிக்கு தகுதி இல்லாதவர் ! 

சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் திமுகவின் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா. சில தினங்களுக்கு முன்பு இந்து மதத்தைப் பற்றி பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து பாஜகவை சேர்ந்த திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் செல்வகுமார் வரும் மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் மீண்டும் ஆராசா போட்டியிட்டால் அவரை டெபாசிட் வாங்க விடமாட்டோம் என சவால் விடுத்துள்ளார். 

மத இன ரீதியாக மக்களை பிரித்து அதை ஓட்டுகளாக மாற்றும் விதமாக ஆ.ராசா தொடர்ந்து பேசி வருகிறார் எனவும், தற்போதைய பேச்சு இந்து மதம் தவிர தனிமனிதர்கள் அனைவரையும் இழிவுபடுத்தி உள்ளதாகவும், மிகவும் அநாகரிமான பேச்சு எனவும் இதை அவர் ஒரு தொழிலாகவே செய்து வருகிறார் எனவும் அவர் எம்பி யாக இருக்கக் கூட தகுதி இல்லை என பாஜக நிர்வாகி குற்றம் சாட்டியுள்ளார். 

திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி கோவில் கோவிலாக செல்வதும், மருமகன் சபரீசன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் யாகம் வளர்ப்பதும் மகள் செந்தாமரை திருவண்ணாமலை கிரிவலம் செல்வதுமாக இருக்கும்போது, ஆ.ராசா கூறிய அனைத்து கருத்துக்களும் திமுகவின் குடும்பத்திற்கும் பொருந்துமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will not let raja get deposits in the nilgiri says tirupur district BJP executive


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->