"நயன்தாரா கணவர் நம்ம ஏரியா பையன் தான் போல? அவர் ஒரு தியாகி" பாஜக மாநில துணை தலைவர் பேச்சு.!  - Seithipunal
Seithipunal


சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பாக பாஜகவின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் திமுகவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்பொழுது உரையாடிய விபி துரைசாமி, "கோவை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்காமல் நான்கு மாதங்களில் நயன்தாராவுக்கு எப்படி குழந்தை பிறந்தது என்பது குறித்து ஆராய குழு அமைத்திருக்கின்றனர். 

நயன்தாராவுக்கு எத்தனை குழந்தை எப்படி பிறந்தால் நமக்கு என்ன? நயன்தாரா கணவர் ஒரு மிகப்பெரிய தியாகி. நயன்தாராவுக்கு குழந்தை பிறந்தது பற்றி அவரே கம்முனு தான் இருக்கார். 

ஓட்டப்பந்தயத்தில் ஓடிக் கொண்டு இருந்தவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், அவர் நயன்தாராவுக்கு எப்படி குழந்தை பிறந்தது என்று குழு அமைத்து விசாரிக்கிறார். அண்ணாமலை பேசுவதால் தான் கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த உண்மைகள் வெளி வருகின்றன. 

இயக்குனர் விக்னேஷ் சிவன் லால்குடி தான். நம்ம ஏரியா பையன் தான் போல? நன்றாக இருக்கட்டுமே. எனக்கு அவர் மீது பொறாமை எல்லாம் ஒன்றும் இல்லை." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vp duraisamy about nayanthara and vignesh sivan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->