வெயிலில் காத்த தொண்டர்கள்...பேசாமல் சென்ற விஜய்...! - காரைக்குடியில் பரபரப்பு அரசியல் காட்சி
Volunteers waited sun Vijay left without speaking tense political scene Karaikudi
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், இன்று காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக சென்னை நகரிலிருந்து தனியார் விமானம் மூலம் மதுரைக்கு வந்த அவர், அங்கிருந்து தனது பிரசார வாகனத்தில் சாலை ஊர்வலமாக புறப்பட்டார்.
மதுரையிலிருந்து காரைக்குடி வரை சுமார் 1.30 மணி நேரத்தில் வந்தடையக்கூடிய பயணம், வழியெங்கும் திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் பெருந்திரளால் தாமதமடைந்தது. மக்கள் கூட்டத்தின் உற்சாக வரவேற்பால் பயணம் மெதுவாக நகர்ந்ததால், திட்டமிட்ட நேரத்தை விட பின்னரே விஜய் காரைக்குடி வந்தடைந்தார்.

காரைக்குடி கண்ணதாசன் நகர் பகுதியில் மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரை மட்டுமே பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் தாமதமாக வந்ததால், நிர்ணயிக்கப்பட்ட நேரம் கடந்துவிட்டதாகக் கருதி அவர் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் காலை முதலே காத்திருந்த நிலையில், விஜய் பேசாமல் திரும்பிச் சென்றது அவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், தனது பிரசார வாகனத்தில் தவெக வேட்பாளர்களை உடன் கொண்டு, விசில் சின்னத்தை உயர்த்தியபடி விஜய் சுருக்கமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சீமான் போட்டியிடும் இந்த முக்கிய தொகுதியில் விஜய் என்ன கருத்து தெரிவிப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அவர் உரையாற்றாமல் திரும்பிச் சென்றது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Volunteers waited sun Vijay left without speaking tense political scene Karaikudi