கிரிமினல் வழக்கில்., நடிகர் விஜய் சேதிபதிக்கு சிக்கல்.! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் முக்கிய கதாநாயகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித்ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பெங்களூருவிற்கு சென்றிருந்தார். அப்போது அவரின் உதவியாளர்  மீது ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தார். 

இது தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே விஜய் சேதுபதியை உதவியாளரை எட்டி உதைத்த மகா காந்தி என்பவர் யூட்யுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்து இருந்தார்.

அதில், விஜய் சேதுபதியுடன் பேசும் போது முத்துராமலிங்க தேவரை அவமதித்து பேசியதாகவும், அப்படி பேசவேண்டாம் என அவரை கண்டித்த போது அவருடைய ஆட்கள் தன்னை தாக்கியதால் தான் அப்படி நடந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், விஜய் சேதுபதி, அவரின் மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சைதாப்பேட்டையை சேர்ந்த அந்த மகா காந்தி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரின் மேலாளர் ஜான்சன் ஆகியோர் வருகின்ற ஜனவரி 4ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VIJAY SETHUPATHI CASE DEC14


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->