தொண்டர்களுக்கு வைகோ போட்ட கட்டுப்பாடு! இனி என்ன செய்வது? குழப்பத்தில் தொண்டர்கள்!!
vaiko says about mdmk members
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தொண்டர்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கழகத் தோழர்கள் ஆர்வமிகுதியால் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனால் போக்குவரத்து இடையூறும், தீ விபத்து ஏற்படும் அபாயமும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் நிகழ்கின்றது.
எனவே பட்டாசு வெடிப்பதை கழகத் தோழர்கள் கண்டிப்பாகக் கைவிட வேண்டும். இதனை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
vaiko says about mdmk members