ஆளுநர் ரவி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருவி.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு..!!
Vaiko alleged Governor Ravi is a tool of RSS
திருநெல்வேலி மாவட்டத்தை அடுத்த ரெட்டியார்பட்டியில் நடைபெற்ற மதிமுக கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ என்று கலந்து கொண்டார். அப்பொழுது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்தித்த அவர் பேசியதாவது "தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் ஆளுநர் மாளிகை நடந்து கொண்டுள்ளது. சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஆளுநர் வெளியேறியிருப்பது எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று. தமிழக ஆளுநர் ரவி அநாகரிகமான செயலில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக அரசின் கொள்கைகள் சாதனைகளை மக்களுக்கு அறிவிக்கும் உரைதான் ஆளுநர் உரை. ஆளுநர் மாளிகை வட்டாரம் என்பது சங்கரிவார், இந்துத்துவா வட்டாரம், சனாதான கொள்கை தான் தமிழை வளர்த்தது என்று ஆளுநர் பொய் கூறுகிறார். ஆளுநர் ரவிக்கு தமிழைப் பற்றி என்ன தெரியும். எந்த பாரதியாரைப் பற்றி இவர் பெருமையாக பேசுகிறாரோ அவரே செந்தமிழ்நாடு என்று தான் சொல்லி இருக்கிறார்.
எனவே ஆளுநரின் இந்த செயலை கண்டிப்பது மட்டுமில்லாமல் அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக ஆர்.என் ரவி வெளியேற வேண்டும். அப்படி செய்யாவிட்டால் மத்திய அரசும் ஆளுநரின் செயலுக்கு உடந்தையாக இருக்கிறது என்பதே அர்த்தம். ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவாரின் கருவியாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்" என செய்தியாக சந்திப்பில் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Vaiko alleged Governor Ravi is a tool of RSS