வெளியான மரண செய்தி., வேதனையில் மூழ்கிய டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த சுபாஷ் என்பவரின் மறைவுக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதிக்கு உட்பட்ட அருமலை கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ். இவர் சிங்கப்பூரில் பணி புரிந்து வருகிறார். சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த போதிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சி பணிகளை சுபாஷ் மேற்கொண்டு வந்தார்.

சமூக வலைதளம் மூலமாகவும், நேரடியாகவும் அரசியல் பணியில் ஈடுபட்டு வந்த சுபாஷ் இன்று மரணம் அடைந்தார். இவரின் மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

"கழகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இளைஞரும்,  சிங்கப்பூரில் பணிபுரிந்தாலும் கழக பணிகளில் பெரும் ஆர்வம் கொண்டவருமான தஞ்சை, ஒரத்தநாடு, அருமலை கிராமத்தை சேர்ந்த திரு.சுபாஷ் திடீரென மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அந்த செயல்வீரரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று அந்தஇரங்கள் செய்தியில் தினகரன் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV mourning to subash


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->