அதிமுகவினரை அதிரவைத்த அந்த இரண்டு சந்திப்பு.! உண்மையை போட்டுடைத்த டிடிவி தினகரன்.!
ttv dinakaran say about sasikala meet ramachandran
ஓபிஎஸ் ஆதரவாளர், தேனி மாவட்ட செயலாளர் ஆக அறிவிக்கப்பட்டுள்ள சையது கான், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்றது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் இது குறித்து தெரிவிக்கையில்,
"தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் பிரசித்தி பெற்ற சாஸ்தா கோவில் ஒன்று உள்ளது. நான் அந்த வழியாக சென்றால் இறங்கி வணங்கி விட்டு செல்வது வழக்கம்.
நான் வருவதை தெரிந்து கொண்டு, மதுரைக்கு செல்லும் வழியில் சையது கான் என்னை சந்தித்து, அவர்களின் மாவட்டத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு கொடுத்தார்.
அதில் வேறு ஒன்றும் இல்லை. இதில் எந்த அரசியலும் கிடையாது. ஒரு நட்பு ரீதியான சந்திப்பு மட்டும் தான். பழைய நண்பர் கூட எனக்கு அவர்" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்க்கு, சசிகலாவிடம் தான் கேட்க வேண்டும் என்று தினகரன் பதில் அளித்தார்.
English Summary
ttv dinakaran say about sasikala meet ramachandran