பிரதமரை தேர்ந்தெடுக்கும் இடத்தில் அமமுக இருக்கும்! – டிடிவி தினகரன் நம்பிக்கை.!!
TTV dhinakaran Said AMMK will be select pm candidate
சிவகங்கை மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து அமமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் "வீரத்திற்கும், விவேகத்திற்கும் பெயர்பெற்ற இந்த சிவகங்கை மண், விசுவாசத்திற்கு பெயர்போன மண் இது. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக துவங்கப்பட்டதே இந்த இயக்கம். ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் மண்ணில் கொண்டு வருவதே இந்த இயக்கத்தின் நோக்கம்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகரில் சின்னம் எதுவும் இல்லாமல் சுயேட்சை சின்னமான குக்கர் சின்னத்தில் நின்றேன். என்னை மக்கள் வெற்றிபெற செய்தனர். சின்னத்தை 15 நாட்களில் கொண்டு சேர்த்து பல தொகுதிகளில் லட்ச கணக்கான வாக்குகளை பெற்றது அமமுக.
நான் ஒன்றும் சினிமா நடிகர் கிடையாது, ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன் நான். சில அரசியல் காரணங்களால் நான் அரசியலைவிட்டு 9 ஆண்டு காலம் ஒதுங்கி நிற்க வேண்டிய சூழ்நிலை. பழனிச்சாமி என்னை பார்த்து தினகரன் ஒரு பொருட்டல்ல என்று கூறுகிறார்.
இன்றைக்கு நம்முடன் கூட்டணிக்கு தயாராக உள்ளனர். இதனை சரியாக பயன்படுத்தி அனைவரையும் வீழ்த்தி மேலே வர வேண்டும். மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பழனிச்சாமி மீதுள்ள கோபத்தில் ஸ்டாலினை வெற்றிபெற்றுவிட்டார்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்டாலின் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் இடத்தில் அமமுக இருக்கும், அதற்காக நாம் பாடுபடவேண்டும்" என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
English Summary
TTV dhinakaran Said AMMK will be select pm candidate