பெரம்பலூர் அமமுக பிரமுகர் கொடூர கொலை.. டிடிவி இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகர் பகுதியைச் சார்ந்தவர் ஆர்.பாண்டி என்ற வல்லத்தரசு. இவர் அமமுக கட்சியில் பெரம்பலூர் நகர கழக மாணவரணி செயலாளராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், இவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த கொலை விஷயம் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, இதுகுறித்து கண்டனமும் இரங்கலும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆர்.பாண்டி என்ற வல்லத்தரசு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். அவரது படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடந்து வரும் படுகொலைகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இது போன்ற கொடூர கொலை சம்பவங்கள் இனி நடக்காதவாறு காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கட்சி பணிகளிலும், கொரோனா நிவாரண உதவிகள் வழங்குவதிலும், துடிப்போடு செயல்பட்டு வந்த தம்பி பாண்டியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran regret perambalur ammk party member murder


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->