#BigBreaking || பிரபல தமிழக அரசியல் கட்சி தலைவர் கைது.! நடிகை விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்.!
tn police arrest hari nadar
நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற வழக்கில், பிரபல அரசியல் கட்சி தலைவர் ஹரிநாடார் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீமானுக்காக ஹரிநாடார் தன்னை மிரட்டுவதாகவும், சீமான், ஹரி நாடாரை கைது செய்ய வேண்டும் எனவும் நடிகை விஜயலட்சுமி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
இது தொடர்பாக திருவான்மியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். மேலும், 16 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதாகி தற்போது பெங்களூர் சிறையில் உள்ள ஹரி நாடாரை கைது செய்வதற்கு போலீசார் அனுமதி கேட்டு பெங்களூர் போலீசாருக்கு கடிதம் எழுதி இருந்தனர்.
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற வழக்கில், பனங்காட்டு படை அரசியல் கட்சியின் தலைவர் ஹரி நாடார் இன்று தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோசடி வழக்கில் கைதாகி தற்போது பெங்களூர் சிறையில் உள்ள ஹரி நாடாரை கைது செய்துள்ள தமிழக போலீசார், அவரை பெங்களூரிலிருந்து அழைத்து வந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tn police arrest hari nadar