சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்டிக் கொடுக்கப்படும்.! தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு.!
TN CM SPEECH JAN17
வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கூட அரசியல் வாசனை சற்று தூக்கலாகவே இருந்தது.
மேலும், தேசிய அரசியல் கட்சியின் தலைவர்கள் தமிழகம் வந்து பொங்கல் கொண்டாடி சென்றனர். தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த பொங்கலை தங்களுக்கான பிரச்சாரமாக மாற்றி அமைத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, கூடி இருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
தமிழக முதல்வரின் அந்த உரையில், ‘‘எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்தால்தான் கட்சி தொடங்க முடியும் என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அவரின் புகழ் ஆலமரம் போல பரந்து விரிந்து, அதிமுக-க்கே நன்மையை வழங்கி வருகிறது.
சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு அதிமுக அரசு வீடுகட்டிக் கொடுக்கும். அதிமுகவின் ஆட்சியில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது. நில அதிகரிப்பு, கட்டப் பஞ்சாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு அதிமுகவின் அரசு தான்.
அதிமுக-வை வெல்லும் சக்தி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை என்பதே உண்மை. ஊழலால் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி." என்று தமிழக முதல்வர் பேசினார்.