#BiGBreaking || கடலூர் புறப்படும் தமிழக முதல்வர்., சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதி தீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையை கடந்துவிட்டது. இரவு 11.30 முதல் அதிகாலை 2.30 மணிவரை இந்த புயல் கரையை கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம், புதுச்சேரியில் கடந்த 5 மணிநேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை பெய்துள்ளது. புதுச்சேரி, கடலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்துள்ளது. புயல் கரையை கடந்த பகுதியான புதுச்சேரி உள்பட சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்தது.

தற்போது நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்கிறது. மேலும், புதுவை மற்றும் கடலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணிக்குள் கடலூரில் 22 செ.மீ மழை பெய்துள்ளது. 

இந்நிலையில், புயல் பாதிப்புகளை பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, இன்று கடலூர் செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பையும், செம்பரம்பாக்கம் ஏரியின் கரை ஓரம் உள்ள பாதிப்புகள் மற்றும் மக்களின் நிலை குறித்து ஆய்வு செய்தார் தமிழக முதல்வர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இன்று சாலை மார்க்கமாக கடலூர் சென்று நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் கடலூர் சென்று பாதிப்புகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்ய உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm cuddalore nivar update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->