தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.!! எகிறும் எதிர்பார்ப்பு.!! - Seithipunal
Seithipunal


நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது முதல் தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 4வது வேளாண் பட்ஜெட் இதுவாகும். இன்று தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண்மை பட்ஜெட்டில் தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்புள்ளது.

கடந்த பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு புதிய சலுகைகள் அளித்தது போன்று இன்று தாக்கல் செய்யப்பட இருக்கும் வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்று தாக்கல் செய்யும் வேளாண் பட்ஜெட் விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN agriculture budget submit in tn assembly


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->