BigBreaking || மன உளைச்சலில் இருந்த மநீம வேட்பாளர் தற்கொலை.!
thirupur mnm candidate suicide
திருப்பூர் மாநகராட்சியின் 36 வது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி அபார வெற்றியை பெற்றுள்ளது.
21 மாநகராட்சியையும் கைப்பற்றி உள்ள திமுக, நகராட்சிகளில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் பேரூராட்சிகளிலும் திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சியின் 36 வது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் மணி, மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் செலவு செய்வதற்காக 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய நிலையில், மணி 44 வாக்குகளை மட்டுமே வாங்கியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த வேட்பாளர் மணி, ன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது மக்கள் நீதி மையம் கட்சியின் கட்சி தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
thirupur mnm candidate suicide